காதல் என்றால் இதுதானோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் என்றால் இதுதானோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூன், 2018

வேட்டையாடப்பட்ட என்னிதயம்

வேட்டையாடப்பட்ட என்னிதயம்....


சிறகடித்துப் பறந்தேன் பெண்ணே,
என்னைச் சிறைபிடித்துச் சென்றாய்,
உன் கள்ளமில்லாப் பார்வையால் 
என்னைக் கொள்ளையிட்டுப் போனாய்,
உன் விழிக்கூண்டுக்குள் என்னை
சிறைவைத்து என்னுயிரிலே உறைந்தாய்,
என்னுள்ளே நீ வந்த பின்னால்
நான் உனதாகிப்போனேன்,
எந்தன் தனிமைக்கதவைத் திறந்துத் 
தாழிட்டு விட்டு இப்போது நீ மட்டும் 
ஏன்தான் வெளியேற  முயல்கிறாயோ...!
மீண்டும் என்னைத் தனிமைத் தீவினில்
தள்ளிவிட்டு என் காதலைத் தீயினில்
கருக்கி விட நினைக்காதே...!
உன் நினைவுகளினால் என்னிதயம்
வேட்டையாடப்பட்ட பின்னால் 
என்னுயிர்  மொத்தமும் உந்தன் 
விழிவாள் வழி சொட்டுகிறதே
தெரியவில்லையா என் கண்ணே...!
நான் பாவமில்லையா பெண்ணே...!


Ajai Sunilkar Joseph

வெள்ளி, 2 ஜூன், 2017

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...


னம் விரும்புவதோ
மரணத்தை மட்டுமே...!
உன் நினைவுகள்தான்
என்னமோ அதைத் 
தள்ளிப்போடுகின்றன...
என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முடிவு செய்த பின்பும்
கமா போட்டு தொடர 
வைக்கிறாய் ஏனடி...?


By...Ajai Sunilkar Joseph




வெள்ளி, 30 டிசம்பர், 2016

வார்த்தைக் கத்தி....

வார்த்தைக் கத்தி....

நான் பேசிய 
வார்த்தைகளே
என்னை கத்தி போல்
கிழிக்கிறது...
அதைக் கேட்டவள்
எப்படி தாங்கியிருப்பாள்
என்று நான் 
உணர்ந்தேன் இன்று...
அதனால்தான் என்னமோ 
இதயம் வலிக்கிறதோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 12 நவம்பர், 2016

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...


ண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...



Ajai Sunilkar Joseph



பிரியமில்லாதவன்