சனி, 30 ஏப்ரல், 2016

என்னில் சந்தோஷத் தோரணம்

என்னில் சந்தோஷத் தோரணம் 





எனக்குத் தாரமாகும்
                     வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு 
                    தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
                    என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
                    எனக்குத் தாரமாக 
வந்திடத்தானே தவம்
                    கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
                    தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
                    கிடைத்த காரணம் தானே...!








Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்




வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நானும் என் தளமும்...

வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமில்லாதவனின் 
பிரியமான வணக்கங்கள்...


என்னைப்பற்றி இதுவரை யாரிடமும் 
நான் சொன்னது கிடையாது.
ஆனால் இங்கு என்னைத் தொடரும் சொந்தங்களுக்கு
சொல்ல ஆசைப்படுகிறேன்.


எனது பெயர் அஜய் சுனில்கர்
எனது அப்பாவின் பெயர்தான் ஜோசப்
அதை சேர்த்துதான் அஜய் சுனில்கர் ஜோசப் என்று
சேர்த்து வைத்துக்கொண்டேன்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் 
தேங்காய்பட்டணம் என்ற ஊரின் பக்கத்தில்
தொழிக்கோடு என்ற ஊரில்...


சாதாரண பிறப்புதான்,
கண்டிப்பான குடும்பம் , அழகான வாழ்க்கை 
அன்பான அப்பா , அம்மா, அண்ணன், அக்கா, கடைசியாக நான்

எவ்வளவுதான் கண்டிப்புடன் என்னை வளர்த்திருந்தாலும்...
எனது பள்ளிக்கூட வாழ்க்கை 7- ஆம் வகுப்புவரைதான் பயணித்தது.


காரணம் 
படிப்பு என்றாலே மண்டையில் ஏறாது...

பள்ளிக்கூட தேர்வுகளில் 35 தான் வெற்றி மதிப்பெண் என்றால்
அந்த மதிப்பெண்கள் கூட கிடைக்காது.

ஒரு தேர்வில் எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து
98 மதிப்பெண்கள் வாங்கினேன் என்றால்
நான் எப்படி படித்திருப்பேன்
என்று நினைத்துப் பாருங்கள்.

படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளிக்கூடம் 
போகாமல் கட் அடித்தேன்.
பள்ளிக்கூடத்தில் இருந்து ஆள் அனுப்பி
வீட்டில் அறிவித்தார்கள்.

அப்பா அடிப்பார் என்று ஓடினேன்
வீட்டை விட்டு எங்கேயாவது போக வேண்டும் என்று...
ஆனால்...

வீட்டில் எவ்வளவுதான் கண்டிப்பு இருந்தாலும் 
அந்த அன்பான வாழ்க்கையை
விட்டுப் போக மனம் அனுமதிக்கவில்லை...

அன்று மதியமே வீட்டில் போனேன்.
வந்ததும் அப்பா அடிக்கவில்லை...
பள்ளிக்கூடம் போறியா...?
வேலைக்கு போறியா...?
என்றார்.

படிப்பில் வேறு நமக்கு வெறுப்பு.
அதனால் வேலைக்கு போறேன் என்றேன்.

அப்போது 2006 ஆம் ஆண்டு
ஒரு தையல் கடையில் என்னை தையல் கற்க
ஏற்பாடு செய்திருந்தார் அப்பா...

அந்த நேரம்தான் 
சிறுவர் தொழிலாளர்களை
தேடி கண்டு பிடித்து
படிக்க வைத்து வந்தார்கள்.

ஆனால் நான் இருந்த பகுதியில் 
அப்படியாரும் என்னை தேடி வரவில்லை.
2006 முதல் 2009 வரை அங்கு
இருந்தேன்.

வெறும் சட்டை மட்டும் தைக்க
கற்றுக் கொடுத்தார்கள்.
பிறகு அங்கு பிடிக்காததால்
அங்கிருந்த எனது தையல் மெஷினை எடுத்து
விட்டு கிளம்பினேன்...

வரும்போது முதலாளி நல்ல ஆசீர்வாதம்
வழங்கி அனுப்பினார்.

என்ன ஆசீர்வாதம் என்று தெரியுமா...?
அவரிடம் வேலை படிக்காமல் வேறு எங்கே போனாலும்
நான் உருப்படவே மாட்டேன் என்பதே....

நெஞ்சில் கொள்ளிக்கட்டையால்
சுட்டதுபோல் வடு இன்னும் மாறவில்லை...

பிறகு பக்கத்து ஊரில் அப்பாவின் நண்பர்
ஏற்பாடு செய்த கடைக்கு 
போனேன்.

அங்கு பேண்ட, சட்டை தைக்க கற்றுத்தந்தார்கள்
ஆனால் அங்கு எப்போதும் முதலாளி
கடையில் இருப்பதில்லை
அதனால் அங்கும் நிலைக்கவில்லை.

பிறகு சொந்த ஊரில் ஒரு கடையில்
2 வருடங்கள் தைத்து
பிறகு பேண்ட், சட்டை வெட்டித் தைக்க
கற்றும் தந்தார்
தைரியமும் தந்தார்...

அந்த கடையில் கொஞ்ச நாட்கள்
வேலை செய்து விட்டு...
முதலாளியின் அனுமதியுடன் திருநெல்வேலியில்
பத்தமடை என்ற ஊரில் எனது பெரியப்பாவின் கடையில்
பெண்கள் ஆடைகள் தைத்து படிக்க போனேன்.
அங்குள்ள இயற்கை எனக்கு ஒத்து வராததால் அங்கு
ஒரு மாதமும் நிலைக்கவில்லை...

பிறகு சொந்த ஊரிலேயே வேறு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு 2 வாரங்கள் வேலை செய்தேன்...
மூன்றாவது வாரம் வேலை செய்து விட்டு
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2012- ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 18- ம் தேதி...
ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் ஊர் சுற்றுவது
நண்பர்களின் வழக்கமான ஒன்று
அன்றும் வழக்கமாக ஊர் சுற்றி விட்டு வரும்போது...

என் பின்னால் இரண்டு நண்பர்களை
அமர வைத்து என் அண்ணனின்
பைக்கில் வந்து கொண்டிருந்தேன்...


ஒரு வளைவான ரோட்டில் அரசுப்பேருந்து விரைவாக
வந்து கொண்டிருந்தது.
ஒலிப்பெருக்கி அப்பேருந்தில் இல்லை போல...

கண் இமைக்கும் நேரத்தில் என் வாழ்க்கை
திசைமாறி பயணித்தது...

ஆமாம் எனது உயிர் ஒரு நொkடி
பிரிந்து சேர்ந்தது...
விபத்து ஒன்றில்...

பேருந்து மோதிய வேகத்தில் 
என் பின்னால் இருந்த நண்பர்கள் தூக்கி
வீசப்பட்டனர்...

நான் எனது கால் முறிக்கப்பட்டு
நான் சென்ற வாகனத்தில் 
அதிசயமாக விழாமல் அமர்ந்தே இருந்தேன்...

நல்ல வேளையாக எனது நண்பர்கள் 
காயங்கள் ஏதுமின்றி 
தப்பித்துக் கொண்டனர்...

எனது வலியும் விபத்து பயமும் என் மூளையில்
நேரடியாய் தாக்க....
அம்மா என்று கத்தியதே பக்கத்து ஊரில்
உள்ளவர்களை சம்பவ இடத்தில் வர வைத்தது.

நான் மெதுவாய் சாயத்துவங்க
பக்கத்தில் நின்ற ஒரு மனிதர் என்னை
விழாமல் தாங்கி பிடித்தார்...

வலது கால் முறிந்து இடது பக்கமாக
வண்டியுடன் சாய
அந்த மனிதர் என்னை பிடித்ததனால்
என் இடது கால் முறிவில் இருந்து தப்பியது.

என் அம்மாவுக்கு இந்த சேதி அறிவிக்கப்பட்டு
என் அம்மா, அக்கா, பாட்டி 
ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே
வந்து அழுதனர்...
நான் ரோட்டில் பிணம் போல் கிடந்ததைப் பார்த்து...

4 மணிக்கு விபத்து நடந்தது
ஆம்புலன்ஸ் போன் போட்டு 1½மணிநேரம்
கழித்தே வந்தது...

அருகே உள்ள மருத்துவ மனையில் என்னை அனுமதித்தனர்.
அறுவைசிகிட்சையில் காலில் ப்ளேட் வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் மருத்துவமனையில் இருந்து
கொஞ்சம் கஷ்டப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி
Walker உதவியுடன் நடந்து,
பிறகு Stick  உதவியுடன் நடந்தேன்.

பிறகு ஒரு வருடம் ஆகும் முன்னால்முன்னால்
கால் இடறி விழுந்து மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை
செய்தனர்.
மீண்டும் ஒரு வருடத்துக்கு பின்னர்
நடக்கும்போது கால் வளைவு ஏற்பட்டதால்
மூன்றாவதாக அறுவைசிகிட்சை
செய்யப்பட்டது.

இப்போது மூன்றாவது அறுவைசிகிட்சை முடிந்து
2 வருடங்கள் கழிந்த நிலையில் மெல்ல மெல்ல நடக்கிறேன்...

விபத்தின் மூலம் கால் 1¼ அங்குலம்
உயரம் குறைந்ததால்....
உயரத்தை அதிகப்படுத்த மீண்டும் ஒரு
அறுவைசிகிட்சை செய்ய நேரலாம்...


விபத்துக்கு பின் கிடைத்த ஓய்வு
நாட்களில் 
எனது முதல் முதலாளியின் ஆசீர்வாதத்தை
முறியடிக்க அந்த இறைவன் அருள்
புரிந்தார்...
அவருக்குத் தெரியாத வேலைகளை கூட
கற்றுக்கொண்டேன்.


இனி எப்படி இந்த கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கல்கள் எழுதினேன்,
எப்படி இந்த தளம் உருவானது என்பதை 
இதோ இந்த இணைப்பில் சொல்கிறேன்...


👇👇👇👇👇
இத்தளத்தை பற்றி



என்னுடன் பேசிப் பழக நினைத்தால்

கைப்பேசி எண் : +919442128959

தொடருங்கள்....

****************************************************

புதன், 27 ஏப்ரல், 2016

மஞ்சரி மற்றும் மாலினி - 1

அன்பான வலையுலக நண்பர்களுக்கு
பிரியமில்லாதவனின் பிரியமான வணக்கங்கள்...
முதன் முதலாய் முயற்சி செய்து
இந்த கதையை துவங்கியுள்ளேன்...
கதையை படித்து விட்டு தங்கள்
கருத்துகளை  சொல்லுங்கள்...

மஞ்சரி மற்றும் மாலினி - 1



அடியே மாலினி விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆவுதே சீக்கிரம் எந்திரிடி என்று அவசரமாய் 
கத்தினாள் மாலினியின் தாய் மஞ்சரி...


ஆம் மாலினி வேறு யாரும் அல்ல
இந்தக் கதையின் நாயகிதான்...


ஏன் தன் மகளை அவசரமாய் கூப்பிடுகிறாள்
என்று அப்புறமாக சொல்கிறேன்...
முதல் மஞ்சரியை குறித்து பார்ப்போம்...

அந்த ஊரில் முத்தைய்யா என்று ஒரு
பணக்காரர் இருந்தார்...

அவரை காதலித்தவர் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு திருமணம் செய்து 
முத்தைய்யாவை பிரிந்து விட்டார்...

இது முத்தைய்யாவுக்கு பெரிய 
ஏமாற்றமாக இருந்தது...
இதிலிருந்து முத்தைய்யாவுக்கு 
பெண்கள் எனெறாலே வெறுப்பு...
ஆனால்....
                  முத்தைய்யாவின் பெற்றோரின் 
வற்புறுத்தலின் பெயரில் முத்தைய்யாவும் 
திருமணம் செய்து கொண்டார்...

ஆனால் தன் மனைவி செல்வியை நன்றாகவே அடிப்பார் உதைப்பார் 
கொடுமை படுத்துவார்...

முத்தைய்யாவின் கொடுமை 
எல்லாம் தாங்கிய செல்வி 
பெற்றெடுத்த அழகு சிப்பிதான் மஞ்சரி...

முத்தைய்யாவுக்கு பெண்கள் மேலிருந்த
வெறுப்புதான் என்னமோ மகள் மஞ்சரியின்
மேல் துளியளவும் பாசமில்லாத காரணம்...

தன் மனைவி பெண் பெற்றாள் என்றே
விசேஷமாக சித்திரவதை செய்வார்...

முத்தைய்யா என்றால் அவரது ஜாதியே
அவருக்கு கட்டுப்பட்டு நிற்கும்...

அவளவு ஜாதிப் பிரியர் இல்லை வெறியர்...

எந்த ஜாதி என்று கேட்க வேண்டாம்...

அது சாணி போல நாறும்...

அதனால் கதையை மட்டும் பார்ப்போம்...

மஞ்சரிக்கோ மருத்துவர் ஆக வேண்டும்
என்பதே கனவாய் இருந்தது...

அதனால்தான் அவள் நினைத்தது கனவாய் கலைந்ததோ...!

தன் மகள் +2 வில் அதிக மதிப்பெண் 
பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் அவளை மேலே படிக்க 
விடாமலே இருந்தார் முத்தைய்யா...

அவரை ஊரே பணக்காரன் என்று சொன்னாலும்...

தன் மகள் வாழ்க்கையில் கஞ்சனாகவே இருந்து
மஞ்சரியின் படிப்பில் மண் அள்ளியே போட்டார்...

காரணம் பெண் என்றாலே அவருக்கு பிடிக்காதாம்...

அப்போ எதற்கு பெண் பெற்றாய் என்று கேட்டால்
அன்று மனைவி செல்விக்கு கொடுமையும்
சித்திரவதையும் தான் மிஞ்சும்...

பெண் பெற்றாள் செல்வி அதனால்தான்
மகளுக்கு இல்லை கல்வி...

மஞ்சரியோ தன் தாய் படும் கொடுமைகளை
பார்த்து மேலே படிக்க வேண்டும் என்ற
எண்ணத்தையும் விட்டு விட்டாள்...

படிக்க ஒருத் தடையா என்று நினைத்து நினைத்து
தன் உள்ளத்தையே உடைத்து விட்டாள்...

அன்பான மஞ்சரியின் மனமோ அகதி போல
சுற்றியே வந்தது தன் ஆசை வைத்த மருத்துவ படிப்பின் மேலே...

மஞ்சரியும் தன் படிப்பை மறந்து இல்லை இல்லை
அந்த எண்ணங்களை மனதினுள்ளே புதையலாய் புதைத்து விட்டாள்...
                                                   (தொடரும்...)          

திங்கள், 25 ஏப்ரல், 2016

தமிழே நமக்கு அடையாளம்...

தமிழன் என்ற பெருமைதான்

தமிழுக்கு இங்கு வறுமைதான்...!

பிற மொழி பேசிய நாவும்

இங்கு தமிழ் மொழி கூவும்...!

தமிழ் மொழி பேசிய நாவிதோ

பிற மொழி மட்டும் கூவுதோ...!

தமிழன் என்றால் கொதிப்புதான்

இங்கு தமிழுக்கில்லை மதிப்புதான்...!

கொஞ்சும் தமிழும் இங்கே

பொங்கும் தமிழும் இங்கே...!

தமிழே நமக்கு அடையாளம்

அதுவே நமது தன்மானம்...

இணையம் கூட தமிழ் பேசும்

தமிழன் மறுப்பான் தமிழ் பேச...!



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 23 ஏப்ரல், 2016

கோபம் வேண்டாம் கண்மணியே...

நுரைகள் பொங்கும்

                         அலைகள் கூட

கரையில் கொஞ்சம்

                         மோதிச் செல்லும்...

கரைகள் என்ன

                         கோபித்தா கொள்ளும்...

கரையில் உன்னிடம்

                         நேசம் வைத்த

எந்தன் சுவாசம்

                         உன்னைக் கொஞ்சம்

கொஞ்சும் போது...

                         மெல்லமாய் உன்னைத்

தீண்டிச் சென்றால்...

                         கோபம் வேண்டாம்

காதல் கண்மணியே...


Ajai Sunilkar Joseph பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வலையுலக நட்பர்களே நான் ஒரு
தொடர்கதை எழுத துவங்கியுள்ளேன்....
ஆனால் எனக்கு கதை எழுதியே பழக்கமில்லை...
இதிலே தொடர்கதை வேறேயா...!
வருகிற நாட்களில் தொடர்கதையை
இதே தளத்தில் பகிர்ந்து கொள்ள
சிறிய ஆவலாய் உள்ளேன்....
கதையை பகிரலாமா என்று உங்கள்
கருத்துகளை எனக்கு தாருங்கள் நட்பர்களே...

(கதை ஒரு உண்மை சம்பவம்
ஆனால் கற்பனைகள் சேர்க்கப்பட்டது)

புதன், 20 ஏப்ரல், 2016

அகதியான இதயத்தில் அவளே கைதி...

கண்ணால் என்னை கடத்தி

சென்றாள் மெல்ல ஒருத்தி...

காதல் வசியம் செய்து

இதயம் எடுத்தாள் கொய்து...

என்னிதயத்தில் அவளே நின்று

கட்டினாள் காதல் சிறையொன்று...

இதயம் அவளிடம் அகதியாய்

அதனுள் அவளே கைதியாய்...

இரவும் பகலும் காவல்

காத்தே செய்தேன் காதல்...

நித்தம் நித்தம் நினைவுகள்

தந்தாள் எந்தன் நெஞ்சுக்குள்...

கண்ணால் காதல் தருகிறாள்

இதயத்தில் அடைந்து கிடக்கிறாள்...



Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விழிகள் தந்த வினாத்தாள்...

காதல் தேர்வினில் அவள்

விழிகள் தந்த வினாத்தாளுக்கு...

அவளின் மனத்தாளினில் விடைகள்

வரைந்தேன் வார்த்தை வரிகளாக...

அவள் விழிகள் தந்த வினாத்தாளுக்கு

அவள் மனமே விடைத்தாள்

ஆனது என் குற்றமா...?

ஏதோ கிறுக்கி விட்டேன்

என்று சற்றும் யோசிக்காமல்...

என்னை ஏசிச் சென்றாள்...

என் காதலுக்கு அவள்

மதிப்பெண் தான் தருவாளோ...!

இல்லை என் காதலை

மதிக்காத பெண்ணாய் ஆவாளோ...!

எதிர் பார்த்து நிற்கிறேன்...

ஏமாற்றம் தான் தருவாளோ...!

என்னில் மாற்றம்தான் தருவாளோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2016

மின்னல் விழி கொண்டவளா...!

கண்கள் கூசும் மின்னலா...

மின்னல் வீசும் கண்களா...

உன் பார்வை பட்டது என்னிலா...

என் பார்வை போனது உன்னிலா...

உன்னை மட்டும் பார்க்கிறேன்...

என்னை நானே மறக்கிறேன்...

என் கண்கள் மூட மறுக்கிறேன்...

உன்னை கனவில் காண துடிக்கிறேன்...

உறக்கம் இல்லை கண்ணிலே...

உன்னை பார்க்கிறேன் கனவிலே...

நீதான் என்மன வானிலே...

நான் கனவாய் காணும் பெண்ணிலா...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 16 ஏப்ரல், 2016

என்னுடலோ சலனமின்றி...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்

சொல்ல முடியாமல் தவிக்கிறேன்...

ஏந்திழையின் விழி இரண்டில்

ஏக்கத்தின் கண்ணீர் பார்க்கிறேன்...

ஏதேனும் சொல்ல நானும்

எத்தனமாய் நிற்கிறேன்...

ஏனோ என்னால் முடியாமல்

ஏக்கம் நிறைந்து திகைக்கிறேன்...

என்னவளின் அருகில் நானும்

நின்று கொண்டே அழுகிறேன்...

ஏனோ தெரியவில்லை என்

கண்ணீர் மண்ணில் விழவில்லை...

என்னுடலோ சலனமின்றி

சவமாய் அவளருகில்...

என்னவளின் அழுகையோ என்னருகில்...

என்னுயிரோ தவிக்குதே அவளருகில்...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கொள்ளை போன வெள்ளை பூவே...!

உள்ளத்தில்...

                          உண்மை காதலின் விதைகள் வீசி...

உள்ளூற முளைத்த காதல் செடியே...

உந்தன் மொழியில் எந்தன் காதல்...

உன்னில் உணர்வாய் என்னில் உயிராய்...

உள்ளின் உணர்வில் உன்னத உயரில்...

உண்மையாய் வளர்ந்து உரிமையாய் துளிர்த்து...

உயிரும் உணர்வும் உறவாய் கலந்து...

உலகம் போல உன்னை சுற்றி...

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வெனும்

ஊற்றின் ஓரத்தில் உண்மை காதலாய்...

மொட்டாய் மலர்ந்த வெள்ளை பூவே...

என்னை சாய்த்து உனக்கு மாலையிட்டு...

உன்னை ஊரறிய கொள்ளையிட்டு ...

போனவன்தான் உனக்காய் தவம்

கிடந்த மன்னவனோ(உன்னவனோ)...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வியாழன், 14 ஏப்ரல், 2016

அறிந்தும் அறியாமை...

வலையுலகில் மலர்ந்த நட்பூக்கள்
அனைவருக்கும் பிரியமில்லாதவனின்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...




விதைகளை சிதற விட்டு

வியர்வையும் சிந்தி விட்டான்...

வயலெங்கும் ஆனதே செழுமை...

விவசாயி வீட்டிலோ வறுமை...

நம் நாட்டுக்கோ இது

அறிந்தும் அறியாமை...

இவனளித்த உணவு ருசிக்கும்...

ஆனால் இவன்பணி கசக்கும்...

என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...

அன்றே நம்நாடு திருநாடு...

அதுவரை இது நம் திருடர் நாடே..!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 13 ஏப்ரல், 2016

இப்போது அறுவடை நாட்களோ...!

இதயத்தில் விதைத்தாள்

                     காதல் விதைகளை...

அன்பை ஊற்றியே

                     உணர்வுகளை வளர்த்தாள்...

விதைப்பின் பலனாய்

                     காதலே விளைந்தது...

இப்போது அறுவடை

                     நாட்களோ என்னமோ

தினமும் நினைவில்

                     வந்து இதயத்தையே

கொய்து செல்கிறாள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

சலனமில்லா கைப்பேசி...

காத்திருந்து பேசிய

                     என் கைப்பேசிக்கும்

அவள் அழைப்பு ஒலி

                     சலித்துப் போய் விட்டதோ...!

அவள் அழைப்பின் ஒலி

                     கேட்க காத்திருக்கிறேன்...

ஒரு சலனமும் இல்லையே...

                     என் கைப்பேசியில்...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வாடகை கொடுக்கிறோமா...!

வாடகை வீடாய்

                            இந்த பூமி...

கொஞ்ச நாட்கள்

                            வாழ்ந்து விட்டுப்

போகவே இந்த

                            வாடகை பூமியில்

வந்துள்ளோம்...

                            அன்பெனும் வாடகை

கொடுத்து விட்டால்

                           சந்தோஷம் என்ற

வீட்டில் நிம்மதியாக

                          வாழலாம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கண்ணீராய் கரைந்தாளோ...!

காதலே...
                 அவள் உன்னை
கனவில் சுமந்து...
                 என்னை கணவனாய்
நினைப்பாள் என்றே
                 கனவுகள் கண்டேனே...!
நடமாடும் மெழுகு
                 பொம்மையோ அவள்...!
காலம் கொழுத்தி விட்ட
                 பிரிவின் அழுகையால்...
என்னை விட்டு
                 கரைந்தே போனாளோ...!
கரையும் போது
                 இதயத்தை உடைத்து
விழி வழியே
                 கண்ணீராய் கரைந்தாளோ...!
பிரியும்போது பேசி
                சென்ற சின்ன சின்ன
வார்த்தை வலிகளால்....! 

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இப்படிக்கு என் உயிர்....

என்னுயிர் பிரிந்து போனது...

                  இப்போது என்னில் துடிப்பது

என்னவளின் உயிர் தான்...

                  இது அவளுக்கே தெரியாது...

தயவாய் யாரும் அவளிடம்

                  சொல்லிட வேண்டாம்...

என்னுயிர் பிரிந்தது தெரிந்தால்

                  அவள் உயிர் தாங்காது...

இப்படிக்கு என் உயிர்...

                  அவளின் நினைவுகள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 2 ஏப்ரல், 2016

உருக்கப் பட்ட காதல்...

அச்சில் வார்க்கப்
                    பட்ட மெழுகாய்
என் காதல்
                    உரு பெற்றது...
என் உயிரிலே
                    உரு பெற்ற காதல்
என் உயிரான
                    அவள் பிரிந்ததால்
என் விழி வழியே
                    உருக்கப் பட்டதோ...!
கண்ணீர் துளிகளாய்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்