வெள்ளி, 30 டிசம்பர், 2016

வார்த்தைக் கத்தி....

வார்த்தைக் கத்தி....

நான் பேசிய 
வார்த்தைகளே
என்னை கத்தி போல்
கிழிக்கிறது...
அதைக் கேட்டவள்
எப்படி தாங்கியிருப்பாள்
என்று நான் 
உணர்ந்தேன் இன்று...
அதனால்தான் என்னமோ 
இதயம் வலிக்கிறதோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 29 டிசம்பர், 2016

பொய்யான நிலா...

பொய்யான நிலா...



காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து 
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 28 டிசம்பர், 2016

என் தவம்....

என் தவம்....

யாருக்கு நீ வரமாக 
கிடைக்கப் போகிறாயோ 
எனக்குத் தெரியவில்லை,
நீ எனக்கு கிடைத்தால்
என்னை விட அதிக தவம் 
செய்தவர் யாருமில்லை...
By....Ajai Sunilkar Joseph




கரையோரம் சிந்திய கவிதைகள்