திங்கள், 21 டிசம்பர், 2015

அவள் கூந்தலில் ஓர் நாள்

அவளிடம் சிறைவாசம் செய்யும் நான்...
அவள் கூந்தலின் பூ வாசம் கண்டு...
அவளுக்காக வனவாசம் செய்து...
வீசும் காற்றுதனில் மகரந்தமாகி...
அவள் வீட்டு பூந்தோட்டம் சேர்ந்து...
அவள் விரும்பும் பூச்செடிதனில்...
அவளுக்காக மொட்டாய் மலர்ந்தேன்...
மங்கையவள் அருகினில் வந்தாள்...
மலரை பறித்து கூந்தலில் சூடினாள்...
அவளிடம் சிறைவாசம் செய்வதை விட...
அவள் கூந்தலில் ஓர் நாள்
வாழ்ந்து மடிந்தாலே போதும்...

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!