ஞாயிறு, 27 டிசம்பர், 2015

என்வளுக்கு பிறந்தநாள் பரிசு

வான மேகங்களும் உன்னை வாழ்த்தும்...
மழைத்துளிகளாக...
வண்ணங்களும் உன்னை வாழ்த்தும்...
வானவில்லாக...
கானக பறவைகளும் வந்துனை வாழ்த்தும்...
கீச்ச்....கீச்ச் இசைகளோடு...
காட்டு புஷ்பங்களும் உன்னை வாழ்த்தும்...
காற்றில் வாசமாக...
பூவனமும் உன்னை வாழ்த்தும்...
புன்னகையாக...
வாழ்த்து மழையில் நீ நனைய
என் கவிச்சாரலும் உனை வாழ்த்தும்...
என் இதயத்தையே உனக்கு பரிசாக தந்து...
பிறந்தநாள் பரிசென உனக்குத் தர
என்னிடம் ஏதுமில்லை என்
வெறுமை இதயத்தை தவிர...

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!