ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிரியமானவளே உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

பிரியமானவளே...
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

ன்னிதயத்தின் பிரியமானவளே
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...
நான் நலமாகத்தான் இருந்தேன்,
நீ என்னை விட்டுப் பிரியும் வரை...
நீ என்னைப் பிரிந்து என்னுள்ளே
என்னை சிந்திக்க வைத்தாய்,
அளவுக்கு அதிகமான அன்பு
வைத்தால் என்னவாகும் என்று...
நீ என்னைப் பிரிந்த நாள்முதல்
என்னுயிரும் என்னைப் 
பிரிந்த உணர்வுகள் எனக்குள்...
இதயமே நீயும் என்னை
விட்டு பிரிந்து விடு,
நீ இருந்ததினால் தான் அவளை 
என்னுயிராய் காதலித்தேன்...
அவளே பிரிந்து போன பிறகு
நீ மட்டும் எதற்கு...?
வலிகளை சகித்துக் கொள்ளவா...?
தயவு செய்து என்னைப்
பிரிந்து விடு இதயமே...!
நான் நிம்மதியாக என் 
கல்லறைக்கு போவேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


1 கருத்து:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!