வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

விழியழகே...!


விழியழகே...!

கோடி வானவில்
கூடி வந்து
உன் கண்ணுக்கு 
கருமை ஆனதோ...!

By...Ajai Sunilkar Joseph


மின்னழுத்தம்

ன் விழிகளின் 
உயர்மின்னழுத்தத்தால்
என் இதயத்தைக் 
குடிக்கும் மின்சாரம்
நீயடி...!

By...Ajai Sunilkar Joseph


வெள்ளைப்பூவே...!

பார்வையால்
வெளிச்சம் வீசி
என்னைக் கொள்ளைக்கொண்ட
வெள்ளைப்பூவே...!
உன் செவ்வாய் மலர்ந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசி விடு...

By...Ajai Sunilkar Joseph


என்னை அபகரித்த நினைவுகள்

ந்தன் இதயத்தை 
அபகரிக்கும் உந்தன் 
நினைவுகளை தட்டியெறிந்துப்
பார்க்கிறேன்,
ஒவ்வொன்றும் 
இரண்டிரண்டாய்
என்னைப் புரட்டிப்போட்டுக்
கொல்லுதடி...!

By...Ajai Sunilkar Joseph


அகலாய் அவள் விழிகள்

கலும் அகலாய் 
அவளிருக்க,
அவளில் அகலாய் 
அவள் விழியிருக்க,
விழுந்தேன் அவளிடம் 
எண்ணெயாய்,
காதல் தீபம் ஏற்றிவிட...!

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்


2 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!