காதலுக்குச் சொந்தக்காரி
நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்
என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,
எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,
தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,
பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,
என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,
பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி
என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,
என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,
பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...
Video
காணொளியும் அருமையான உள்ளது... உங்களின் குரலா...?
பதிலளிநீக்குநன்றி அண்ணா,
நீக்குஎன் குரல்தான் அண்ணா...
நல்ல காணொளியில் நல்ல கவிதை.வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குமீண்டும் ஒரு அருமையான் படைப்பு... தொடரட்டும் பயணம்...
பதிலளிநீக்குகாதலையும் தாண்டி எழுதுங்கள்...
நன்றி நண்பரே ...!!!
நீக்குமுயல்கிறேன்...