நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம்
பரப்பி வைத்து
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
பெண்ணே உன்னால்
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
என்னை நித்தம்
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்
நெடுந்தூரம் நடந்து விட்டேன்...
உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக
நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...
Video
Semma
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே...
பதிலளிநீக்குநல்ல கவிதை. ரசித்தேன் நண்பரே.
பதிலளிநீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குரசித்தேன் சுவைத்தேன்
பதிலளிநீக்கு