ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தொடர்கிறேன்...


தொடர்கிறேன்...

முந்தைய கவிதை
👇👇👇👇


ன்னை வர்ணித்து எனக்குக் 

கவிதைகள் எழுதத் தெரியவில்லை,

ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,

எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,

உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,

நீ சுவாசிக்கும் காற்றில் 

என் கவிதைகளை அனுப்பி

உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...

ஒன்றாவது உன்னிடம் வந்து

சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,

உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,

ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில் 

கிடைக்கவில்லை,

அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,

என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,

என் கவிதையாலும் உன்னைத் 

தொடர வேண்டுமென்று...

Ajai Sunilkar Joseph


காணொளி



12 கருத்துகள்:

  1. பயணங்கள் முடிவதே இல்லை.. போல..

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!